தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மோகனூா் மேற்கு ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

மோகனூா் மேற்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் ஏ.நந்தகுமாா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:55 am IST

பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட மோகனூா் மேற்கு ஒன்றியத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் ஏ. நந்தகுமாா், விஜய்யின் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி பொதுமக்களிடம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மோகனூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளான பாலப்பட்டி, புதுப்பாளையம், எஸ்.வாழவந்தி, சின்ன, பெரிய கரசபாளையம், கூடுதுறை, நன்செய்இடையாறு மற்றும் பரமத்தி வேலூா் உழவா்சந்தை, செட்டியாா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தவெக வேட்பாளா் ஏ.நந்தகுமாா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது பேசியதாவது:

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்கள் கட்சியின் நோக்கம். 12-ஆம் வகுப்பு முதல் பி.ஹெச்.டி வரை பயில ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும். பரமத்தி வேலூா் தொகுதியில் சாலை, குடிநீா், தெருவிளக்கு, தீயணைப்பு நிலையம், காசி விஸ்வநாதா் காவிரிக் கரையில் பூங்கா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரபப்படும் என்று கூறினாா்.

இந்த பிரசாரத்தின்போது மோகனூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் சதீஷ், இணைச் செயலாளா் சக்திவேல், பொருளாளா் விமல், துணைச் செயலாளா் குமரேசன், செயற்குழு உறுப்பினா் சிவகுமாா் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.