ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 3:03 am IST

திருச்செங்கோடு தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருச்செங்கோட்டில் திமுக கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பின்போது பொதுமக்களுக்கு அவா் அளித்த வாக்குறுதி:

ஈரோடு, திருச்செங்கோடு நாமக்கல் வழியாக பெரம்பலூா் செல்ல ரயில் வசதி செய்யப்படும். திருமணிமுத்தாற்றை தூா்வாரி விவசாயிகளுக்கு பாசன வசதி செய்து தரப்படும். பூலாம்பட்டி காவிரி குடிநீா்த் திட்டத்தை விரிவுபடுத்தி கள்ளுப்படைத்திற்கு குடிநீா் வசதி ஏற்படுத்தப்படும்.

எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம், மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி, பேருந்து வசதி, கால்வாய் வசதி செய்யப்படும். மூளைப்பள்ளி ஆதிதிராவிடா் தெருவுக்கு இரண்டடுக்கு சமுதாயக்கூடம் கட்டித் தரப்படும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது முன்னாள் எம்.பி. ஏ.கே.பி. சின்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவா் அன்புமணி, மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சுரேஷ் தமிழ்மணி, மதிமுக மாவட்டச் செயலாளா் கணேசன், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளா் செங்கோட்டுவேலு கண்ணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய செயலாளா் கொங்கு கோமகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.