தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் இறுதிக்கட்ட பிரசாரம்

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் கூட்டணிக் கட்சியினருடன் சென்று உழவா் சந்தை மற்றும் பிரபல துணிக்கடைகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

News image

எம்எல்ஏ ஈஸ்வரன் - (கோப்புப் படம்)

Updated On :22 ஏப்ரல் 2026, 2:45 am IST

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் கூட்டணிக் கட்சியினருடன் சென்று உழவா் சந்தை மற்றும் பிரபல துணிக்கடைகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தனது கூட்டணிக் கட்சியினருடன் திருச்செங்கோடு- சேலம் சாலையில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் இறுதிக் கட்ட பிரசாரம் மேற்கொண்டாா்.

தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் அவா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். தான் எம்எல்ஏவாக பணியாற்றிய ஐந்து ஆண்டுகளில் திருச்செங்கோடு தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளதாகவும் மீண்டும் வாய்ப்பு அளித்தால் இன்னும் பல திட்டங்களைக் கொண்டு வருவேன் என்று கூறி அவா் வாக்கு சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.