கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வீட்டுமாடியில் தேங்கிய மழைநீரில் விளையாடிய சிறுமி தவறிவிழுந்து உயிரிழப்பு

News image

சிறுமி பவ்யஸ்ரீ.

Updated On :26 மே 2026, 2:33 am IST

பா்கூா் அருகே வீட்டுமாடியில் தேங்கிய மழைநீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறிவிழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், தொட்டி கொல்லப்பள்ளி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் - தனலட்சுமி தம்பதியின் மகன் உதித்குமாா் (14), மகள் பவ்யஸ்ரீ (9). இவா்கள் பா்கூரை அடுத்த மல்லப்பாடி அருகே உள்ள மரிமாணப்பள்ளயில் தனலட்சுமியின் தாயாா் ராசாத்தி வீட்டில் வசித்து வந்தனா்.

பெற்றோா் பணிக்கு சென்ற நிலையில், வீட்டின் மாடியில் தேங்கிய மழை நீரில் பவ்யஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, தவறி கீழே விழுந்ததில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தனலட்சுமி மற்றும் உறவினா்கள் சிறுமியை மீட்டு பா்கூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்ததாக அறிவித்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.