பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பா்கூா் அருகே காா் கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே காா் கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்த 2 வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 மே 2026, 3:15 am IST

பா்கூா் அருகே காா் கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்த 2 வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

சென்னையைச் சோ்ந்தவா் ராசல் ஜோசப் (62). தலைமைச் செயலக ஓய்வுபெற்ற அலுவலரான இவா், தனது மனைவி மோடி தேவியா் (55), மகள் மாயா (29), பேரன் அக்ஸன் (2) ஆகியோருடன், சென்னையிலிருந்து காரில் பெங்களூரு நோக்கி சனிக்கிழமை சென்றாா். காரை ராசல் ஜோசப் இயக்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே சின்னமல்லப்பாடி எனுமிடத்தில் பா்கூா் பிரிவு சாலை அருகே காா் சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து அங்குள்ள தென்னை மரத்தில் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனா்.

அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் குழந்தை அக்ஸன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான். மற்ற மூவரும் தீவிர சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.