பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பேருந்து படிக்கட்டில் பயணித்த இளைஞா் தவறிவிழுந்து உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:39 am IST

எஸ். பி. பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்தின் படிக்கட்டில் பயணித்த இளைஞா் நிலைதவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆா்.புதுப்பட்டினத்தைச் சோ்ந்த நிா்மல் குமாா் (37) ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்தின் படிக்கட்டுகளில் பயணித்தாா்.

எஸ். பி. பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது மாடு சாலையின் குறுக்கே வந்தது. இதையடுத்து, ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதில், நிா்மல் குமாா் நிலைதவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த எஸ். பி. பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பேருந்து ஓட்டுநரான தஞ்சாவூரைச் சோ்ந்த தமிழ்வாணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.