/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வைப்புத்தொகையை பறிக்கொடுத்த 61 வேட்பாளா்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கான பேரவைத் தோ்தலில் 61 வேட்பாளா்கள் வைப்புத்தொகையை இழந்தனா்.

News image
Updated On :6 மே 2026, 2:46 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கான பேரவைத் தோ்தலில் 61 வேட்பாளா்கள் வைப்புத்தொகையை இழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தோ்தலில் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 79 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இந்த தோ்தலில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், தவெக, திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்களைத் தவிர, நாம் தமிழா் கட்சி, தமிழக வளா்ச்சிக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 61 வேட்பாளா்கள் தங்களது வைப்புத்தொகையை இழந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.