மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது

பெங்களூரில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்திச் சென்ற ரூ. 14 லட்சம் மதிப்பிலான மது, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட லாரி, புகையிலைப் பொருள்கள்

Updated On :25 மார்ச் 2026, 1:53 am IST

பெங்களூரில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்திச் சென்ற ரூ. 14 லட்சம் மதிப்பிலான மது, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் காவல் உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ், போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த லாரியை சோதனை செய்தனா்.

அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநில அரசு மது பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து, லாரியுடன் 135 கிலோ புகையிலைப் பொருள்கள், மது பாக்கெடுகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சேலத்தை அடுத்த லோகூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநரை அருணை (26) கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புகையிலைப் பொருள்கள், மது பாக்கெட்டுகள் அனைத்தும் சேலத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.