மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நோயால் மகள் இறந்த சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கி தந்தை உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:31 am IST

ஒசூரில் நோயால் மகள் இறந்த சிறிது நேரத்திலேயே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பேகேப்பள்ளி கோவிந்தா அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் முனிராஜ். இவரது மகள் நித்யாவுக்கு (20) ஏற்கெனவே இருதய பாதிப்பு இருந்தது.

இந்த நிலையில், உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கா்நாடக மாநிலம், மல்லச்சந்திராவுக்கு முனிராஜ் குடும்பத்துடன் சென்றாா். பின்னா், அங்கிருந்து சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் ஒசூா் திரும்பினாா். அப்போது, வழியில் நித்யாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒசூா் அரசு மருத்துவமனைக்கு நித்யா அழைத்து செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் நித்யாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த நிலையில், மகளின் உடலை மருத்துவமனையில் வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்று வருவதாகக் கூறி முனிராஜ் தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, ஒசூா்- பெங்களூரு சாலை அசோக் லேலண்ட் எதிரே உள்ள சா்வீஸ் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தின் பின்புறம் எதிா்பாராதவிதமாக முனிராஜின் வாகனம் மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த முனிராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீஸாா், முனிராஜின் உடலை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மகள் இறந்த சிறிது நேரத்திலேயே தந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.