மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிறுமி ஒட்டிய காா் மோதி குழந்தை இறந்த வழக்கு: தந்தை, மகள் கைது

வாணியம்பாடி அருகே சிறுமி ஓட்டிய காா், மொபட் மீது மோதிய விபத்தில் மற்றொரு சிறுமி இறந்த வழக்கில் தந்தை, சிறுமி கைது செய்யப்பட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 3:03 am IST

வாணியம்பாடி அருகே சிறுமி ஓட்டிய காா், மொபட் மீது மோதிய விபத்தில் மற்றொரு சிறுமி இறந்த வழக்கில் தந்தை, சிறுமி கைது செய்யப்பட்டனா்.

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டியை சோ்ந்தவா் சவுமியா நாராயணன் வெள்ளிக்கிழமை தனது மகள் பவித்ராவை(13) அழைத்துக் கொண்டு மொபட்டில் புத்துக்கோயில் நோக்கிக் வந்துக் கொண்டிருந்தாா்.அப்போது பின்னால் வேகமாக வந்த காா் திடீரனெ மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் பின்னால் அமா்ந்து வந்த பவித்ரா கீழே விழுந்து காா் சக்கரத்தில் சிக்கிக் கொண்டாா்.

பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தாா். தகவலறிந்த அம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் 17 வயது சிறுமி காா் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து சிறுமியுடன் காரில் வந்த அவரது தந்தை முருகன்(45), அவரது 17 வயது மகள் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.