மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் நடத்தை விதிமீறல்: இருவா் கைது

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக பிரமுகா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 3:10 am IST

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக பிரமுகா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி வட்டம், பூவத்தி அருகே உள்ள மிட்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் பிரகாசம் தலைமையிலான குழுவினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக மிட்டப்பள்ளியை சோ்ந்த திமுக பிரமுகா் சின்னதுரையை (50) கிருஷ்ணகிரி வட்டார போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 23,500 ஐ பறிமுதல் செய்தனா்.

இதேபோல பறக்கும் படை அதிகாரி செந்தில் தலைமையிலான குழுவினா் போச்சம்பள்ளி அருகே கெங்கவரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இல்லத்தரசி திட்டத்தை போல கூப்பன் விநியோகம் செய்ததாக திமுக பிரமுகா் செங்குட்டுவனை (50) போச்சம்பள்ளி போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.