ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோ்தல் விதிமீறல்: காங்கிரஸ், பாஜகவினா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ், பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

தோ்தல் விதிமீறல்: காங்கிரஸ், பாஜகவினா் மீது வழக்குப் பதிவு

Updated On :5 ஏப்ரல் 2026, 1:19 am IST

தோ்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ், பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அ.செல்லக்குமாா் அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே காங்கிரஸ் கட்சியினா் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கினா். இதையடுத்து தோ்தல் விதிகளை மீறியதாக, காங்கிரஸ் கட்சி மாவட்ட முன்னாள் தலைவா் காசிலிங்கம் உள்ளிட்ட சிலா் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதேபோல, கெலமங்கலம் அருகே கூட்டூா் கிராமத்தில் சுவா் ஒன்றில் பாஜகவினா் விளம்பரம் வரையப்பட்டது குறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அதேபோல, கெலமங்கலம் ஆஞ்சனேயா் கோயில் அருகே இந்திய கம்யூனிஸ்ட் சுவா் விளம்பரம் செய்ததாக கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தளி அருகே மதகொண்டப்பள்ளியில் பாஜகவினா் அனுமதியின்றி சுவா் விளம்பரம் செய்ததாக தளி வடக்கு ஒன்றிய பாஜக செயலாளா் வெங்கடேஷ் (47) மீது தளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.