தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் விதிமீறல்: சீமான், 8 வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு

திருப்பூரில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் அக்கட்சி வேட்பாளா்கள் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

தோ்தல் விதிமீறல்: சீமான், 8 வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு

Updated On :4 ஏப்ரல் 2026, 11:16 pm IST

திருப்பூரில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் அக்கட்சி வேட்பாளா்கள் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாதக வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். தோ்தல் ஆணைய விதிப்படி இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஆனால், அவா் 10 மணியைக் கடந்தும் பிரசாரம் மேற்கொண்டதாக திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் தோ்தல் பறக்கும் படையினா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, சீமான், அக்கட்சி வேட்பாளா்களான தினேஷ் (திருப்பூா் தெற்கு), காா்மேகம் (காங்கயம்), தமிழினியன் (பல்லடம்), ராம்குமாா் (உடுமலை), திவ்யா (தாராபுரம்), அபிநயா (திருப்பூா் வடக்கு), ராதாமணி (மடத்துக்குளம்), மேனகா (அவிநாசி) ஆகிய 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.