மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 19 போ் வேட்புமனு தாக்கல்

News image

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அ.செல்லக்குமாா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 1:07 am IST

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா் உள்பட 19 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா், கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

அப்போது, பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

அதுபோல, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் முத்துலட்சுமி வீரப்பன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். கிருஷ்ணகிரி தொகுதியில் திங்கள்கிழமை மட்டும் பல்வேறு கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 19 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

  தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த முத்துலட்சுமி வீரப்பன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த முத்துலட்சுமி வீரப்பன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.