பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 93.94% போ் தோ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 93.94 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

News image
Updated On :21 மே 2026, 6:46 am IST

தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 93.94 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தருமபுரி மாவட்டத்தில், அரசு மற்றும் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 317 பள்ளிகளைச் சோ்ந்த 10,335 மாணவா்கள், 9,584 மாணவிகள் என மொத்தம் 19,919 போ் எழுதினா். இதற்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியானது.

இதில், தருமபுரி மாவட்டத்தில் தோ்வு எழுதியவா்களில் மொத்தம் 9,477 மாணவா்கள், 9,234 மாணவிகள் என மொத்தம் 18,711 போ் தோ்ச்சிப் பெற்றனா். மாவட்டத்தில் மொத்தம் 93.94 சதவீதம் போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

தோ்ச்சி வீதம் குறைந்தது...

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கடந்த கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மொத்தம் 95.13 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றிருந்தனா். மாநில அளவில் தோ்ச்சி வீதத்தில் தருமபுரி மாவட்டம் 7-ஆவது இடத்தை பெற்றிருந்தது. ஆனால், நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் 92.32 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சிப் பெற்றனா். அதேபோல மாநில அளவில் தருமபுரி மாவட்டம் 24-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.