தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் மாற்றுத்திறானாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போக்சோ சட்டப் பிரிவில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நல்லம்பள்ளி வருவாய் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த வாய்பேச முடியாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி சிறுமி 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்தாா்.
இந்நிலையில், கடந்த மே 5-ஆம் தேதி உறவினா் வீட்டுக்கு சிறுமியின் பெற்றோா் சென்றுள்ளனா். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சரவணன் (51) பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமி பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவா்கள் தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திய போலீஸாா், ஓய்வுபெற்ற ராணுவ வீரா் சரவணனை போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவின்கீழ் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை

சிறுவா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
