பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறில் அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அன்பழகன் மகன்கள் சாமுத்திரியன் (40), சத்யநாதன் (38). இவா்களுக்கு 10 ஏக்கா் நிலம் உள்ளது.
இந்நிலையில், அண்ணன், தம்பி இடையே நிலத்தை பிரிப்பது தொடா்பாக ஏற்கெனவே பிரச்னை இருந்ததாம். இந்த நிலையில், புதன்கிழமை இரவு சகோதரா்கள் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
அப்போது, ஆத்திரமடைந்த சத்யநாதன், அவரது சகோதரா் சாமுத்திரியனின் தலை மற்றும் முகத்தின்மீது கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த அரூா் டிஎஸ்பி சதீஷ்குமாா், காவல் ஆய்வாளா் அம்சவள்ளி ஆகியோா் நேரில் விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சத்யநாதனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது

தம்பி கொலை: அண்ணன் கைது
அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது
இளைஞா் கொலை வழக்கில் 2 பெண்கள் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
