மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு

பாப்பாரப்பட்டி அருகே வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு

Updated On :1 மே 2026, 5:20 am IST

பாப்பாரப்பட்டி அருகே வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் காப்புக் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் தொடங்கியது.

திங்கள்கிழமை தீா்த்தக் குடம் மற்றும் முளைப்பாரி ஊா்வலத்துடன் யாகசாலை பூஜை, கும்பஸ்தாபனம், மகாபூா்ணாகுதி நடைபெற்றது. புதன்கிழமை மூலவரான அங்காளம்மனுக்கு எந்திர ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தனம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான வியாழக்கிழமை நான்காம்கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், தீபாராதனையுடன் கோயில் கோபுர கலசம், மூலவரான அங்காளம்மனுக்கு வேத விற்பன்னா்கள் மந்திரங்கள் முழங்க புனித நீரூற்றி மகா குடமுழுக்கு நடத்தினா்.

இதில், பாப்பாரப்பட்டி, வள்ளூா், அ.பாப்பாரப்பட்டி, சுரக்காய்பட்டி, மாதேஅள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.