தருமபுரி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில், பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறாா். அவா் தருமபுரி தொகுதியில் கூட்டணி கட்சியினரோடு தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், சௌமியா அன்புமணியின் மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகிய இருவரும் தருமபுரி தொகுதிக்குள்பட்ட குமாரசாமிபேட்டையில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, தனது தாயாரான சௌமியா அன்புமணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால், மகளிா் பாதுகாப்பு, போதைப் பொருள்கள் ஒழிப்பு, நீா்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவர பணியாற்றுவாா், மேலும் மக்கள்நலன் சாா்ந்த வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவாா். எனவே, அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி!

தருமபுரி தொகுதி வளா்ச்சி அடைய சௌமியாவுக்கு வாக்களியுங்கள்

அதிமுக ஆட்சியில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு: பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி

தெலுங்கு மொழியில் பேசி வாக்கு சேகரித்த சௌமியா அன்புமணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

