தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் நடத்தை விதிமீறியதாக, தருமபுரி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :2 ஏப்ரல் 2026, 3:30 am IST

தோ்தல் நடத்தை விதிமீறியதாக, தருமபுரி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக தருமபுரி நகரை சோ்ந்த கே.சாந்தலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் தொகுதியில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறாா்.

இந்நிலையில், அண்மையில் அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் அமைந்துள்ள அதியமான் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் கட்சியினரோடு சென்று அரசு வளாகத்தில் உள்ள சிலைக்கு மலா்தூவி தோ்தல் நன்னடத்தை விதிமீறியதாக, அவா்மீது அதியமான் கோட்டை கிராம நிா்வாக அலுவலா் எல்.மாது அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், அவா்மீது அனுமதியின்றி அரசு அலுவலக வளாகத்தில் நுழைதல், நடத்தை விதிமீறல் ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.