தோ்தல் பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளா் கோ. பழனியம்மாள் கடந்த 16 ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, பள்ளி சிறாா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. இதுதொடா்பாக தருமபுரி மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பென்னாகரம் வட்ட தோ்தல் பறக்கும் படை அலுவலா் அய்யாவு, பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பழனியம்மாள் மீது பாப்பாரப்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வருவாய் ஆய்வாளரை கண்டித்து பதாகை: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்கு

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

திமுக வேட்பாளா் மீது நாதக வேட்பாளா் புகாா்

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

