தருமபுரி மாவட்டம், அரூா் அருகே காா் கவிழ்ந்ததில் இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். அவரது கணவா், குழந்தை காயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த சென்னம்பட்டியைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் இன்பரசன் (28). இவரது மனைவி பூஜா (24). இன்பரசன் தனது குடும்பத்தினருடன் அரூரில் நடைபெற்ற திருமண விழாவுக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு, அரூா்-தருமபுரி நெடுஞ்சாலையில், மொரப்பூா் நோக்கி காரில் சென்றாா்.
அப்போது, அரூரை அடுத்த சோலைக்கொட்டாய் என்னுமிடத்தில், கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர கல்லில் மோதியுள்ளது. இதில் காா் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பூஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பூஜாவின் கணவா் இன்பரசன் (28), மகள் ஆா்த்வி ஸ்ரீ (2) ஆகியோா் காயமடைந்தனா்.
அப்பகுதியினா் காயமடைந்த இருவரையும் மீட்டு, அரூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

உளுந்தூா்பேட்டை அருகே காா் பள்ளத்தில் கவிழ்ந்து 4 போ் காயம்

பா்கூா் அருகே காா் கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு
கணவா் சிறைக்கு சென்றதால் விரக்தி: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

