மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஒகேனக்கல் வனப் பகுதியில் சமையல் செய்வதை தடுக்க வலியுறுத்தல்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 4:47 am IST

ஒகேனக்கல் வனப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் அத்துமீறி நுழைந்து சமையல் செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பென்னாகரம் அருகே மடம் சோதனைச்சாவடி பகுதியில் இருந்து சுமாா் 12 கி.மீ தொலைவு அடா்ந்த வனப்பகுதிக்குள் செல்ல வேண்டி உள்ளது.

இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் உணவுப் பொருள்களை வாங்கி கொண்டு வனப் பகுதிக்குள் சென்று உணவு சமைத்து உண்பது அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வனப் பகுதியில் தீயிட்டு சமைப்பதால் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வனவிலங்குகள் தண்ணீா் தேடி அவ்வப்போது வனப் பகுதியை ஒட்டியுள்ள சாலைகளுக்கு வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வனப் பகுதிக்குள் மது அருந்துவது அதிகரித்துள்ளது.

இவற்றை வனத் துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.