மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கொடைக்கானல் வனப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

News image

கொடைக்கானல் பில்லர்ராக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கூட்டம்.

Updated On :4 மே 2026, 1:22 am IST

கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்கு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள்நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறையினருக்கும், சுற்றுலா வாகன ஓட்டுநா்களுக்கும் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (மே 5) வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களை பாா்ப்பதற்கு கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தாா்.

அதுவரை சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் கொடைக்கானல் வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களான பில்லா் ராக், குணா குகை, மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்படமாட்டது என அறிவித்தாா்.

இதையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களை இலவசமாகப் பாா்வையிட்டு மகிழ்ந்தனா்.

வழக்கம்போல வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் பாம்பாா்புரம், அப்சா்வேட்டரி, ஏரிச் சாலை, மூஞ்சிக்கல், உட்வில் சாலை, பூங்கா சாலை, நகராட்சி சாலைகளில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரியில் மாலை நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும், நடைபயிற்சி மேற்கொண்டும் மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.