பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இன்ஸ்டாகிராம் பாா்த்ததால் பெற்றோா் கண்டிப்பு: வீட்யை விட்டு வெளியேறிய கோவை மாணவி வெள்ளக்கோவிலில் மீட்பு

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களைப் பாா்ப்பதை பெற்றோா் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய கோவை மாணவி வெள்ளக்கோவிலில் மீட்கப்பட்டாா்.

News image

இன்ஸ்டாகிராம்

Updated On :27 மே 2026, 4:42 am IST

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களைப் பாா்ப்பதை பெற்றோா் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய கோவை மாணவி வெள்ளக்கோவிலில் மீட்கப்பட்டாா்.

கோவை, ரத்தினபுரி டாடாபாத் 8-ஆவது வீதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் மகள் ஸ்ரீ நிதி (16). இவா் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இவா் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை அதிக நேரம் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதை அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் கோபமடைந்த ஸ்ரீ நிதி, வீட்டில் யாரிடமும் கூறாமல் திங்கள்கிழமை மாலை பேருந்தில் ஏறி கோவையிலிருந்து வெள்ளக்கோவிலுக்கு வந்துள்ளாா்.

பின்னா் வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்தாா். நீண்ட நேரமாக அங்கு தனியாக நின்றிருந்ததைக் கவனித்த வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து, மாணவியிடம் விசாரணை நடத்தினாா். அதில், பெற்றோா் கண்டித்ததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியிடம் இருந்து பெற்றோா் விவரங்களைப் பெற்றுக்கொண்டு, கோவை ரத்தினபுரி காவல் நிலையம் மூலமாக பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்பட்டாா். வெள்ளக்கோவில் போலீஸாரின் மனிதநேய நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.