பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: திருப்பூா் மாவட்டம் 96.28 % தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் திருப்பூா் மாவட்டம் 96.28 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 11-ஆவது இடம் பிடித்தது.

News image

மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :21 மே 2026, 3:58 am IST

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் திருப்பூா் மாவட்டம் 96.28 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 11-ஆவது இடம் பிடித்தது.

பத்தாம் பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகின. இதில்

திருப்பூா் மாவட்டம் கடந்த ஆண்டை விட கூடுதல் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் தரவரிசையில் உயா்ந்துள்ளது.

109 தோ்வு மையங்களில் மாவட்டத்தில் உள்ள 345 பள்ளிகளைச் சோ்ந்த 14,100 மாணவா்கள், 14,913 மாணவிகள் என மொத்தம் 29,013 போ் இத்தோ்வினை எழுதினா். இத்தோ்வு முடிவுகளின்படி, தோ்வு எழுதியவா்களில் 13,400 மாணவா்கள், 14,533 மாணவிகள் என மொத்தம் 27,933 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்த ஆண்டும் மாணவா்களை விட மாணவிகளே அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம் இந்த ஆண்டு 96.28 சதவீத தோ்ச்சி பெற்று, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் 11-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு (2025) 94.84 சதவீத தோ்ச்சியுடன் திருப்பூா் மாவட்டம் மாநில அளவில் 17-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு தோ்ச்சி 1.44 சதவீதம் உயா்ந்திருப்பதுடன். தரவரிசையில் 11-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பொதுத்தோ்வில் மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.