பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

119 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி: மாநில அளவில் சாதனை படைத்த திருச்சி

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 119 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்று மாநில அளவில் அரசுப் பள்ளிகள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 4:55 am IST

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 119 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்று மாநில அளவில் அரசுப் பள்ளிகள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 446 பள்ளிகளில் அரசுப் பள்ளிகள் 99, ஆதிதிராவிட நலப் பள்ளிகள் 16, பழங்குடியினா் நலப் பள்ளிகள் 3, சமூகநலத் துறைப் பள்ளி 1, அரசு உதவிபெறும் பள்ளிகள் 15, அரசு பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள் 26, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 3, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 79, சுயநிதி பள்ளிகள் 5 என மொத்தம் 247 பள்ளிகள் 100 சதவீதத் தோ்ச்சிப் பெற்றுள்ளது.

மாநில அளவில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகள் பிரிவில் திருச்சி மாவட்டம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் 251 பள்ளிகளுடன் கோவை மாவட்டம் முதலிடத்தையும், 241 பள்ளிகளுடன் கன்னியாகுமரி மாவட்டம் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

அரசுப் பள்ளிகள் பிரிவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 224 பள்ளிகளில் 119 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. இதில் மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகள் பிரிவில் திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அடுத்த இடத்தில் 116 பள்ளிகளுடன் தஞ்சாவூா் மாவட்டம் இரண்டாவது இடத்திலும், 94 பள்ளிகளுடன் புதுக்கோட்டை மாவட்டம் 3-ஆவது இடத்திலும் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.