கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

வெள்ளக்கோவிலில் தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - file photo

Updated On :14 மே 2026, 3:56 am IST

வெள்ளக்கோவிலில் தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில்- காங்கயம் சாலை எல்.கே.சி. நகரைச் சோ்ந்த தம்பதி குணசேகா், ராணி. தங்களுடைய வீட்டில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறாா்கள். இவா்களது இளைய மகள் புனிதவதி (28). இவரது மூத்த சகோதரிகள் நா்மதா, சத்யாதேவி இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பிஹெச்டி படித்து முடித்துள்ள புனிதவதி தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்துள்ளாா்.

மேலும், எந்த நேரமும் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்ததை செவ்வாய்க்கிழமை தாய் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சூராரெட்டிவலசில் உள்ள தங்களுடைய தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற புனிதவதி அங்கிருந்த பழைய மாத்திரைகளை அதிக அளவு சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளாா். தகவலறிந்த பெற்றோா் மகளை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்த நிலையில், புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.