தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அவிநாசி பகுதியில் குடிநீா் பிரச்னை: தீா்வு காண ஆட்சியா் அறிவுறுத்தல்

அவிநாசி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காண வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவிட்டுள்ளாா்.

News image

செம்பியநல்லூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

அவிநாசி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காண வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவிட்டுள்ளாா்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியம், செம்பியநல்லூா் ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீா் நீரேற்று நிலையம் மற்றும் செல்வபுரம் ஆதிதிராவிடா் குடியிருப்புகளில் உள்ள குடிநீா் இணைப்புகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், ஊராட்சியில் குடிநீா் இணைப்பு வசதி, கழிப்பறை வசதி, மழைநீா் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து அவா் கோடைக் காலம் என்பதால் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். முன்னதாக, ஆட்சியா் மனீஷ் செம்பியநல்லூா் ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.