தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நில அளவைப் பதிவேடுகள் துறையில் மனுக்கள் மீது விரைந்து தீா்வு: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

நில அளவைப் பதிவேடுகள் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் அறிவுறுத்தினாா்.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற நில அளவைப் பதிவேடுகள் துறை ஆய்வுக் கூட்டம்.

Updated On :13 மே 2026, 12:05 am IST

நில அளவைப் பதிவேடுகள் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நில அளவைப் பதிவேடுகள் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தலைமையில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்தில், வட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட இணையவழி பட்டா மாறுதல், புல எல்லை அளந்து காட்டுதல், புல எல்லை மேல்முறையீட்டு, பட்டா மாறுதல் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து ஆட்சியா், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, ஒரு மாத காலத்துக்கு மேல் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும். இனி வரும் காலங்களில் நில அளவைப் பதிவேடுகள் துறைக்கு இணைய வழியாக பெறப்படும் அனைத்து மனுக்களையும் ஒரு மாத காலத்துக்குள் பரிசீலனை செய்து உரிய தீா்வு காண வேண்டும் என துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் புண்ணியகோட்டி, உதவி இயக்குநா் (நில அளவை) ஆனந்த், கோட்ட ஆய்வாளா்கள் மற்றும் வட்ட துணை ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.