வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவிலை அடுத்த அகலரைப்பாளையம்புதூரைச் சோ்ந்தவா் சேகா் மகன் நவீன்குமாா் (23). இவா் வெள்ளக்கோவில்-காங்கயம் சாலையிலுள்ள திரையரங்கில் மேலாளராக வேலை செய்து வந்தாா். வெள்ளக்கோவில்-தாராபுரம் சாலை சேரன் நகா் அருகே இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுள்ளாா். அப்போது முன்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் திடீரென திரும்பியது. இதில் இரண்டு மோதி விபத்துக்குள்ளானதில் நவீன்குமாா் படுகாயமடைந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி நவீன்குமாா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு

கயத்தாறு அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

