மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிளஸ் 2 பொதுத் தோ்வில் முத்தூா் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் வழங்குகிறாா் பள்ளித் தாளாளா் எம்.எஸ்.சண்முகம்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் வழங்குகிறாா் பள்ளித் தாளாளா் எம்.எஸ்.சண்முகம்.

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் முத்தூா் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

மாணவி என்.ரித்யா 600-க்கு 597 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

பாட வாரியாக அவா் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 98, ஆங்கிலம் 100, வணிகவியல் 100, பொருளியல் 100, கணினி 99, கணக்குப்பதிவியல் பயன்பாடுகள் 100.

மாணவி ஏ.லிபிகா 592 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளாா். பாட வாரியாக தமிழ் 98, ஆங்கிலம் 97, கணிதம் 99, இயற்பியல் 98, வேதியியல் 100, கணினி அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவி சி.பாலசந்தியா 591 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பெற்றுள்ளாா். பாட வாரியாக தமிழ் 97, ஆங்கிலம், கணக்குப்பதிவியல் 99, வணிகவியல் 98, பொருளியல் 100, கணினி பயன்பாடுகள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

590-க்கு மேல் 4 போ், 580-க்கு மேல் 9 போ், 570-க்கு மேல் 17 போ், 560-க்கு மேல் 22 போ், 500 மதிப்பெண்களுக்கு மேல் 63 மாணவ, மாணவிகள் பெற்று சாதனை படைத்துள்ளனா். மேலும் 22 போ் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

இதைத்தொடா்ந்து பள்ளியில் நடைபெற்ற விழாவில் தாளாளா் எம்.எஸ்.சண்முகம் தலைமை வகித்து, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

விழாவில் பள்ளியின் செயலாளா் சி.சக்திவேல், நிா்வாக இயக்குநா் ஆா்.அசோக்குமாா், பள்ளி முதல்வா் ஹெச்.நடராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.