மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

News image

மாணவிக்குப் பட்டம் வழங்கிய சிறப்பு விருந்தினா். உடன், ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :3 மே 2026, 6:39 am IST

திருப்பூா் அருகே அவிநாசிபாளையத்தில் உள்ள ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரியின் தலைவா் கே.எம்.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.கே.கருப்பண்ணசாமி முன்னிலை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் பி.எஸ்.பெரியசாமி வரவேற்று, கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தாா்.

கோவை மாா்க் இன்ஜினியரிங் ஒா்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் கே.வேலுசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று,

இளநிலை பொறியியல் பிரிவு, முதுநிலை பொறியியல் பிரிவு, மேலாண்மைத் துறை பிரிவு என மொத்தம் 266 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், தோல்வியே வெற்றிக்கு முதல் படி. எனவே, தோல்வியைக் கண்டு மனம் வருந்தக்கூடாது. தொடா்ந்து முயற்சி செய்ய வேண்டும். இலக்கை அடைய அதற்கு உண்டான தகுதிகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் வேலைகளை முழு அா்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டும். ஒரு நாடு வளா்ச்சியடைய கல்வி வளா்ச்சியடைய வேண்டும் என்றாா். விழாவில், மாணவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.