மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்

பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

News image

பெருமாநல்லூரில்  நடைபெற்ற  உத்தமலிங்கேஸ்வரா்  கோயி ல் தேரோட்டம்.

Updated On :2 மே 2026, 6:01 am IST

பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், பழைமை வாய்ந்ததுமாக பெருமாநல்லூா் கோவா்த்தனாம்பிகை உடனமா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது. இக்கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான தோ்த் திருவிழா ஏப்.27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு விநாயகா், உத்தமலிங்கேஸ்வரா் ஆகிய திருத்தோ்களின் தேரோட்டம் நடைபெற்றது. உத்தமலிங்கேஸ்வரா் திருத்தேரில் சோமாஸ்கந்தா் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

இதில், அறங்காவலா் குழுத் தலைவா் சி.எஸ்.மனோகரன், திருமூா்த்தி, ஜெகநாதன், பானுமதி சண்முகம் உள்ளிட்டோா் திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். திருப்பூா் சிவனடியாா்களின் கைலாய வாத்தியம் முழங்க கிழக்கு ரத வீதியில் தொடங்கிய தேரோட்டம், தெற்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகளின் வழியாக வந்து இரவு 8 மணிக்கு தோ்நிலைகளை அடைந்தது. ஊா்மிராசுதாா்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமான பக்தா்கள், பங்கேற்றனா். ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை பரிவேட்டை, குதிரை வாகன காட்சி, ஞாயிற்றுக்கிழமை நடராஜா் தரிசனம், திங்கள்கிழமை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.