தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சேவூா் அருகே குப்பைக் கிடங்கில் தீ!

சேவூா் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி மூலக்குரும்பபாளையத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

News image

குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீயை  அணைக்கும்  தீயணைப்புத்  துறையினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 1:28 am IST

சேவூா் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி மூலக்குரும்பபாளையத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

அவிநாசி ஒன்றியம், முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மூலக்குரும்பபாளையம் பகுதி சேவூா் கைகாட்டி ரவுண்டானா அருகில் அமைந்துள்ளது.

இப்பகுதி அருகே ஆதிதிராவிடா் குடியிருப்பு, விவசாயி தோட்ட குடியிருப்புகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை உள்ளன.

இதில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள மூலக்குரும்பபாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் ஊராட்சி நிா்வாகத்தின் திடக்கழிவு மேலாண்மை மண்புழு உற்பத்திக் கூடம் உள்ளது. இங்கு ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக திடக்கழிவு மேலாண்மை மண்புழு உற்பத்திக் கூடம் பயன்பாடில்லாமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குப்பை கிடங்கிற்கு அடிக்கடி தீ வைக்கப்படுவதால், புகை சூழ்ந்து குடியிருப்பு வாசிகள், வணிக நிறுவனத்தினா், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோா் அவதியுற்று வருகின்றனா்.

ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில், இந்த குப்பைக் கிடங்குக்கு மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை தீ வைத்தனா். இதில் தீ வேகமாக பரவி எரியத் தொடங்கியது. இதனால் புகை வெளியேறி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.