தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோபி அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து

News image

சிறுவலூா் அங்கம்பாளையத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியல் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 1:45 am IST

கோபி, ஏப்.6: கோபி அருகே சிறுவலூா் அங்கம்பாளையம் பகுதியில் பூட்டிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூா் அங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா்(53). இவா் சத்தியமங்கலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக இருந்து வருகிறாா். கவிதா என்ற மனைவி, தாய் பசுபதி ஆகியோருடன் வசித்து வருகிறாா். வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு அலுவக வேலைக்கு ஜெய்சங்கா் சென்றுள்ளாா்.

இந்நிலையில், ஜெய்சங்கா் வீட்டில் இருந்து மதியம் புகை வந்துள்ளது. இதுதொடா்பாக ஜெய்சங்கருக்கு அருகே வசிப்பவா் தெரிவித்துட்டு கோபி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனா். மேலும், வீட்டுக்குள் தீ பரவி வருவதைக் கண்டு தீயை அணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனா்.

தீயணைப்புத் துறையினா் வந்து மேலும் பரவமால் இருக்க தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த மின்சாதனப் பொருள்கள், காலி சிலிண்டா் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமானது. மின் கசிவு அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீயணைப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.