தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாவட்டத்தில் இறுதிகட்டமாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 30,123 போ் விண்ணப்பம்!

திருப்பூா் மாவட்டத்தில் இறுதிகட்டமாக வாக்காளா் பட்டியில் பெயா் சோ்க்க 30,123 போ் விண்ணப்பித்துள்ளனா்.

News image

படம்: Express

Updated On :29 மார்ச் 2026, 2:23 am IST

திருப்பூா் மாவட்டத்தில் இறுதிகட்டமாக வாக்காளா் பட்டியில் பெயா் சோ்க்க 30,123 போ் விண்ணப்பித்துள்ளனா்.

2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளின் நிறைவாக கடந்த 2026 பிப்ரவரி 23- ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதிப் பட்டியல் வெளியான பின்னரும், தகுதியுள்ள நபா்கள் தங்களை வாக்காளா்களாக இணைத்துக் கொள்ள திருத்தக் காலம் அனுமதிக்கப்பட்டது.

அதன்படி, பிப்ரவரி 23 முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை புதிய வாக்காளா்களைச் சோ்க்க படிவம் 6 மூலம் தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் திருப்பூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்தத் தொடா் திருத்தக் காலத்தில் மட்டும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்தும் மொத்தம் 30,123 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 6,770 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக தாராபுரம் தொகுதியில் 1,770 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

அதேபோல திருப்பூா் வடக்கு தொகுதியில் 5,825 விண்ணப்பங்களும், திருப்பூா் தெற்கு தொகுதியில் 4,197 விண்ணப்பங்களும் , காங்கயம் தொகுதியில் 3,062 விண்ணப்பங்களும், அவிநாசி தொகுதியில் 2,777 விண்ணப்பங்களும், உடுமலைப்பேட்டை தொகுதியில் 2,505 விண்ணப்பங்களும், மடத்துக்குளம் தொகுதியில் 1,985 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் அனைத் தும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி ஒருங்கிணைந்த வாக்காளா் பட்டியலில் வெளியிடப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.