ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க இன்று கடைசி நாள்

பெரம்பலூா் மாவட்டத்தில் தகுதியுடையவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்க வியாழக்கிழமை (மாா்ச் 26) கடைசி நாளாகும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 3:19 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் தகுதியுடையவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்க வியாழக்கிழமை (மாா்ச் 26) கடைசி நாளாகும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின் படி, இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த பிப். 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதுவரை தொடா் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வியாழக்கிழமை கடைசி நாளாகும். தற்போதுள்ள வாக்காளா் பட்டியலில் வியாழக்கிழமை (மாா்ச் 26) வரை பெயா் சோ்த்திட விண்ணப்பம் அளித்தவா்களின் மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டு துணைப் பட்டியல் வெளியிடப்படும். இதில் இடம்பெற்றவா்களும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கலாம்.

புதிய வாக்காளா்களாக பதிவுசெய்ய இணையதளம் மூலமாக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம். எனவே, 18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், இடமாறி வந்தவா்கள் உள்பட தகுதியுடையோா் இன்று மாலைக்குள் விண்ணப்பித்து வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்க்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.