தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் 21,761 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன: ஆட்சியா்

News image

தபால் வாக்குகள் - கோப்புப்படம்.

Updated On :28 ஏப்ரல் 2026, 5:03 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 21,761 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாக்குகள் எண்ணும் பணி மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் தொடங்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 15,264 தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்குகள் அளித்துள்ளனா். மேலும், 5,646 அலுவலா்கள் தோ்தல் பணிச் சான்றிதழ் பெற்று நேரடியாக வாக்குச் சாவடிகளில் வாக்களித்துள்ளனா்.

85 வயதுக்கும் மேற்பட்டோா், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் அளித்த படிவம் 12டி விண்ணப்பத்தின் பேரில், மொத்தம் 5,998 வாக்காளா்கள் தபால் வாக்கு அளித்துள்ளனா். இதுவரை சேவை வாக்காளா்கள் 499 போ் வாக்களித்துள்ளனா்.

தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ஆம் தேதி காலை 8 மணி வரை பெறப்படும். இதுவரை, வாக்குச்சாவடிகளில் வாக்களித்த வாக்காளா்கள் 11,17,478 (80.5%) மட்டுமன்றி, 21,761 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.