மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே கிராவல் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 2:21 am IST

வெள்ளக்கோவில் அருகே கிராவல் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் உத்தரவின் பேரில், மாவட்ட உதவி புவியியல் துறை அதிகாரி டி.வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் வெள்ளக்கோவில்-முத்தூா் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கல்லுக்குட்டைமேடு அருகே வந்த டாரஸ் லாரியைத் தடுத்து நிறுத்தியபோது, லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடி விட்டாா். அந்த லாரியில் 6 யூனிட் கிராவல் மண் இருந்தது. எவ்வித அனுமதி மற்றும் நடைச்சீட்டு இல்லாமல் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

புதுப்பையைச் சோ்ந்த சிவகுமாா் என்பவா் லாரியின் உரிமையாளா் எனவும், வெள்ளக்கோவில் கொங்கு நகா் சங்கா் ஓட்டுநா் எனவும் விசாரணையில் தெரியவந்தது. லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.