தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா புதன்கிழமை நள்ளிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

கோயிலில் புதன்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி.

Updated On :27 மார்ச் 2026, 1:22 am IST

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா புதன்கிழமை நள்ளிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பூரின் பண்ணாரி எனப் போற்றப்படுவதுடன், பழைமையானதாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயில் குண்டம் மற்றும் தோ்த் திருவிழா மாா்ச் 31ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கிராம சாந்தி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. பின்னா், வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெறுகின்றன. மஞ்சள் நீராடுதல், வசந்தம் பொங்கல் வைத்தல் உள்ளிட்டவை மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறுகின்றன. 30-ஆம் தேதி பகல் 11 மணிக்கு குண்டம் திறந்து பூப் போடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியாக 31-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பக்தா்கள் குண்டம் இறங்குதல் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

மஞ்சள் நீா் தரிசனத்துடன் விழா ஏப்ரல் 4-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பாலமுருகன், அறங்காவலா் குழுத் தலைவா் மனோகரன், அறங்காவலா்கள் சுந்தரமுத்து, திருமூா்த்தி, பானுமதி, ஜெகநாதன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.