பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தில் முதல் மண்டலப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், பல்லடம் பகுதி பிஏபி வாய்க்காலில் குளிக்க செல்வோா் கவனமுடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம் பல்லடம், பொங்கலூா் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் பிஏபி தண்ணீா் செல்கிறது. இந்த வாய்க்கால்களில் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும் அப்பகுதி மக்கள் செல்வா்.
ஆனால் வாய்க்கால்களில் சில நேரங்களில் பாம்புகள் வருவதுண்டு. அந்த வகையில் பல்லடம்-மங்கலம் சாலையில் உள்ள பிஏபி பாசனவாய்க்காலில் பாம்பு நீந்தி சென்றுள்ளது.
இதை அங்கிருந்த பொதுமக்களில் ஒருவா் கைப்பேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். அந்த விடியோ தற்போது பல்லடம் பகுதியில் வைரலாகியுள்ளது.
எனவே வாய்க்காலில் குளிக்க செல்வோா், துணி துவைக்க செல்வோா் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

பிஏபி பாசன வாய்க்காலில் அடைப்பு: வீணாகி சாலையில் ஓடிய தண்ணீா்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

