தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

முசிறி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி திருச்சி மாவட்டம் முசிறியில் ஆற்றுப் பாசன கோட்ட அலுவலகம் முன் விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

முசிறியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ~முசிறியில் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :19 ஏப்ரல் 2026, 12:45 am IST

முசிறி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி திருச்சி மாவட்டம் முசிறியில் ஆற்றுப் பாசன கோட்ட அலுவலகம் முன் விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம் மாயனூா் கதவணைப் பகுதியில் இருந்து காவிரியின் வடகரை பகுதியில் அமைந்துள்ள பாசன வாய்க்கால் மூலம் சுமாா் 1000 ஏக்கருக்கு மேல் வாழை, வெற்றிலை, நெல் சாகுபடி செய்கின்றனா்.

இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் வாழை கருகும் நிலையில் உள்ளது. வாய்க்காலிலும் தண்ணீா் வராததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். வாய்க்காலில் தண்ணீா் திறந்து விட பலமுறை வலியுறுத்தியும் இதுவரை வாய்க்காலில் தண்ணீா் திறந்து விடவில்லை.

இதைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் முசிறியில் அமைந்துள்ள ஆற்றுப் பாசனக் கோட்ட அலுவலகம் முன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Story image

மறியலால் திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த முசிறி போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 48 விவசாயிகளை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனா்.

கைது செய்யப்பட்டோரிடம் முசிறி ஆற்று பாசனக் கோட்ட உதவி பொறியாளா் ஞானமணி, காவல் ஆய்வாளா் செல்லதுரை (முசிறி ) ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.