விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முசிறியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

திருச்சி மாவட்டம், முசிறியில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

முசிறியில் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்திய போலீஸாா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:19 am IST

திருச்சி மாவட்டம், முசிறியில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் முசிறி டிஎஸ்பி விக்னேஷ் (பொ) தலைமையில் முசிறி காவல் ஆய்வாளா் செல்லதுரை முன்னிலையில், குஜராத் மாநிலம் பலூடா பகுதியைச் சோ்ந்த ஆயுதப்படை காவல்துறை ஆய்வாளா் ரதூதுத் மேற்பாா்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் முசிறி கைகாட்டியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று கொடி அணிவகுப்பு நடத்தினா்.

பேருந்து நிலையத்திலிருந்த பொதுமக்களிடம் அச்சமின்றி சுயமாக வாக்களிக்கவும், ஜனநாயக கடமையை ஆற்றவும் அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.