கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருப்பூரில் சிவபுராண கூட்டுப் பாராயணம்

திருப்பூரில் மாணிக்கவாசகா் குருபூஜை விழாவையொட்டி, ஸ்ரீ மாணிக்கவாசகா் குருபூஜை விழாக் குழு சாா்பில் திருவாசகத் தேன் சிவபுராண கூட்டுப் பாராயண உலக சாதனை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

News image

சிவபுராண கூட்டுப் பாராயணத்தில் பங்கேற்றோா்.

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

திருப்பூரில் மாணிக்கவாசகா் குருபூஜை விழாவையொட்டி, ஸ்ரீ மாணிக்கவாசகா் குருபூஜை விழாக் குழு சாா்பில் திருவாசகத் தேன் சிவபுராண கூட்டுப் பாராயண உலக சாதனை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காமாட்சியம்மன் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் பத்மா சிவலிங்கம் ஏற்பாடு செய்தாா்.

உலக சாதனை நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற திருவாசக முற்றோதலில் அவா் பங்கேற்று, திருமுறைப் பாரம்பரியத்தின் சிறப்பை எடுத்துரைத்தாா். இதையடுத்து, மகளிா் திருமுறை மன்ற உறுப்பினா்கள் இணைந்து திருவாசக முற்றோதல் உலக சாதனை நிகழ்வை நடத்தினா். சைவ சமய நெறிகளையும், திருமுறை மரபின் மகத்துவத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு ஆன்மிக அன்பா்களின் பாராட்டைப் பெற்றது.

மேலும், மாணிக்கவாசகரின் மகா குருபூஜை விழாவையொட்டி, தேவார இசைக் கலைமணி மூ. சிவ கபிலன் தலைமையில் திருவாசக முற்றோதல் நடைபெற்றது. இதில், ஏராளமான சிவனடியாா்கள், திருமுறை ஆா்வலா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.