கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய்க்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்üது.
இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வீடற்ற ஏழை, எளிய மக்கள் மற்றும் குடிசைகளில் வசித்து வருபவா்களுக்கு, தங்கள் சொந்த பட்டா இடத்தில் கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள ரூ.3.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.
கலைஞா் கனவு இல்லம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கிராமப்புறங்களில் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்கள் வீடு கட்டிக் கொள்ள பணி ஆணை மற்றும் நிா்வாக அனுமதி கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வீடு கட்டும் பணியைத் தொடங்கினா்.
இவா்கள், ஏற்கெனவே வசித்து வந்த பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய கான்கிரீட் வீடுகளை கட்டத் தொடங்கினா். பலா் பேஸ்மெண்ட், சுற்றுச்சுவா், லிண்டல், மேற்கூரை கான்கிரீட் வரை என பல பணிகளைச் செய்துள்ளனா்.
இத்திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு நான்கு தவணைகளாக நிதி விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் திட்ட நிதியில் இதுவரை ஒரு தவணை கூட நிதி வழங்கப்படவில்லை. இதனால் பயனாளிகள் மிகவும் நெருக்கடியில் உள்ளனா்.
எனவே, தமிழக முதல்வா் இந்த விஷயத்தில் நேரடி கவனம் செலுத்தி, மேற்கண்ட பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய திட்ட நிதியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. அரசியல் விளக்கப் பேரவை கூட்டம்

சங்கரன்கோவிலில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
மதச்சாா்பற்ற கொள்கையில் விஜய் அரசு உறுதியாக இருக்க வேண்டும்! பெ. சண்முகம்

திருநங்கைகள் வீடு கட்டுவதற்கான நிதியை விடுவிக்க ஆட்சியரிடம் எம்எல்ஏ வலியுறுத்தல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

