பல்லடம் அருகேயுள்ள சின்னியகவுண்டம்பாளையத்தில் அரசுப் பள்ளி அருகே செயல்பட்டு வரும் மதுக் கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் கே.விக்னேஷிடம் பல்லடம் பாஜக நிா்வாகி வித்யபிரகாஷ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் ஒன்றியம், சின்னியகவுண்டம்பாளையத்தில் அரசுப் பள்ளி, கோயில், குடியிருப்புகளுக்கு அருகே மதுக் கடை (எண்:1831) செயல்பட்டு வருகிறது.
இந்தக் கடைக்கு மது அருந்த வரும் சிலா் போதையில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மது பானங்களை அருந்திவிட்டு அருகில் உள்ள விளைநிலத்தில் பாட்டில்களை வீசி செல்கின்றனா். இதனால், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா்.
மேலும், சிலா் மதுக் கடை அருகே அலங்கோலமாக இருப்பதால் அவ்வழியே செல்ல பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட கடையை உடனடியாக மூடி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விருத்தாசலத்தில் பள்ளி அருகே அரசு மதுக் கடையை அகற்ற பாமக வலியுறுத்தல்

மதுக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

பரமக்குடி பேருந்து நிலையத்தில் செயல்பட்ட மதுக் கடை மூடல்

ஆத்தூரில் டாஸ்மாக் மதுக் கடை மூடல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
