அம்மாபேட்டை அருகே செயல்பட்டு வரும் மதுக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள குறிச்சி, வாய்க்கால்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் மதுக் கடையால் அப்பகுதி மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மதுக் கடையை மூட வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், வாய்க்கால் மேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் சம்பந்தப்பட்ட மதுக் கடையை முற்றுகையிட்டு திங்கள்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை போலீஸாா், வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கை குறித்து உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மதுக் கடை வழக்கம்போல திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்
விருத்தாசலத்தில் பள்ளி அருகே அரசு மதுக் கடையை அகற்ற பாமக வலியுறுத்தல்

மதுக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்

மூடப்பட்ட அரசு மதுக் கடையை மீண்டும் திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

