மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் வெ.கோகிலாமணி, அவிநாசி செங்காடு திடலில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்டப் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

அவிநாசி, செங்காடு திடலில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய  திமு க  வேட்பாளா்  வெ.கோகிலாமணி.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:06 am IST

அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் வெ.கோகிலாமணி, அவிநாசி செங்காடு திடலில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்டப் பிரசாரம் மேற்கொண்டாா்.

இதில் அவா் பேசியதாவது:

இந்தத் தொகுதி மக்களுக்கென நியாயவிலைக் கடைகள், சமுதாய நலக் கூடங்கள், சாலை உள்பட எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. மாதம்தோறும் வங்கிக் கணக்கில் மகளிா் உரிமைத்தொகை செலுத்தப்படுகிறது. திட்டங்களை தீட்டுவது மட்டுமின்றி, அதனை மக்களிடமும் கொண்டு சோ்க்கிறது. தமிழகத்தை நாட்டின் முதல் மாநிலமாக மாற்றியது திமுக அரசு.

உங்களை நம்பித்தான் களத்தில் நிற்கிறேன்.

ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் அரசு பணியில் அமர வேண்டும். இதற்காக முழு முயற்சி எடுப்பேன். அவிநாசியில் அரசு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதன்மூலமாக ஆயிரம் இளைஞா்கள் பயனடைவாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.