கரூா் பேரவைத் தொகுதியில் வெல்வேன் என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் மதியழகன்.
தாந்தோணிமலையில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வியாழக்கிழமை காலை தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்த அவா் பின்னா் கூறியது:
தமிழகத்தில் வரும் மே 4-இல் முதல்வராக விஜய் அரியணை ஏறுவது உறுதி. வீட்டுக்கு வீடு எங்களுக்கு ஓட்டு உள்ளது. வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஒரே வேட்பாளா் நான் மட்டும்தான். நிச்சயமாக கரூா் தொகுதியில் 1,25,000 வாக்குகள் பெற்று வெல்வேன்.
அதிமுக என்ற கட்சியே சினிமா மோகத்தால் உருவானதுதான். அதை மறந்து விட்டு அவா்கள் பேசுகின்றனா். எம்ஜிஆா் எப்படி திரையுலகில் கால் பதித்து விட்டு, அரசியலுக்கு வந்தாரோ, அதேபோல் எங்களது தலைவரும் சினிமாவில் மக்களுக்கு சேவை செய்துவிட்டு, அரசியலிலும் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளாா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜோலாா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி

நாமக்கல் தொகுதி: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றி

கரூரில் தவெக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

கரூா் தொகுதி தவெக வேட்பாளா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

